"நூறு இளைஞர்களை எனக்கு கொடுங்கள், வலிமையான பாரதத்தை உருவாக்கி காட்டுகிறேன் என்றார் விவேகானந்தர்."
அவ்வேளையில் நாம் அவர் அழைப்புக்கு செவி சாய்க்கவில்லை,இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகும் அவர் அழைப்பு வெறும் அழைப்பாகவே நம் செவிகளில் ஒலிக்கிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் அது அழைப்பாகவே இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
இந்த வலைப்பதிவின் நோக்கம் விவேகானந்தர் விரும்பிய இளைஞர்களை உருவாக்குவது அல்ல!. அவர் விரும்பிய இளைஞர் யார்? அவர்கள் எத்தகையவர்? என்பதை அடையாளம் கண்டுகொள்வதே! ஏன் எனில் அவர் விரும்பிய இளைஞர் யார் என்பதை இன்றளவும் அறிய விருப்பம் இல்லதவர்களாக அந்நிய ஆதிக்கத்தில் மோகம் கொண்டு, அவரின் ஒரு சில கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அதன் மெய்பொருள் உணராமல் அறிந்து கொண்டு, அதை அந்நிய கலாச்சாரத்தின் இன்றைய நிலையில் ஒப்பிட்டு, "அவர் வழி செல்கிறோம்" என்ற நிலையில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
"ஒவ்வொரு நாடும் ஒரு தனித்தன்மையை கொண்டுள்ளது". அதன் தனித்தன்மையை அடைந்தவுடன் அல்லது இழந்தவுடன் அந்த நாடு சிதைந்துவிடுகிறது. பாரதத்தின் தனித்தன்மை ஆன்மீகம் தான்! ஆன்மிகம் மட்டும் தான்!! பாரதம், உலகிற்கு உணர்த்த விரும்பும் கோட்பாடு, "ஆன்மீக கோட்பாடுகள் தான்" என்பதை ஆணித்தரமாக உறுதி உடன் உலகிற்கு எடுத்து கூறியவர் சுவாமி விவேகானந்தர்.
இருப்பினும் இம் மண்ணில் வாழும் நாம், உண்மையான ஆன்மிகம் என்றால் என்ன? என்பதை அறியாதவர்களாகவே வாழ்கிறோம். உண்மையான ஆன்மீகம் எங்கு இருக்கிறது? எது ஆன்மீகம்? விவேகானந்தர் அழைத்த இளைஞர்கள் யார்? என்பதை அலசி ஆராயும் நோக்கில் உருவாக்கப்பட்டது இந்த வலைப்பதிவு. இதில் தாங்களும் தங்கள் கருத்தை பதிவு செய்து, இந்த ஆராய்வில் கலந்து, தாங்கள் அறிந்த கருத்துகளை மற்றவர் அறிய செய்ய வேண்டுகிறேன்.
தேசபணியில்,
பிரகலாத்.
Tuesday, September 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment